செங்கல்பட்டு பெருமாள் கோவிலுக்கு திருக்குடை
ADDED :2192 days ago
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த, மலைவையாவூர் கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.செங்கல்பட்டு பாதயாத்திரை பக்தர்கள் குழுவினர், மேட்டுத்தெரு தர்மராஜா கோவில் அருகில் புறப்பட்டு, வேண்பாக்கம் வழியாக, மதியம், 1:00 மணிக்கு, வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சென்றனர்.அங்கு, கோவில் நிர்வாகத்திடம், திருக்குடை வழங்கினர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை, பாதயாத்திரை குழுவினர் செய்தனர்.