உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மேல்மலையனூர் தாலுகா வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர், இரவு 8 மணிக்கு கலை நிகழ்ச்சியும். இரவு 10 மணிக்கு அங்காளம்மன் ஊஞ்சல் தாலாட்டும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அரங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !