உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூரில் மணவாள மாமுனிகள் மகோற்சவம்

திருக்கோவிலூரில் மணவாள மாமுனிகள் மகோற்சவம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஐப்பசி திருமூல மகோற்சவத்தை முன்னிட்டு மணவாளமாமுனிகள் புறப்பாடு நடந்தது.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஐப்பசி திருமூல மகோற்சவ விழா கடந்த 23ம் தேதி துவங்கியது. விழாவின் நிறைவு தினமான நேற்று காலை 8:30 மணிக்கு மணவாள மாமுனிகள் சன்னதியில் இருந்து புறப்பாடாகி, பெருமாள், தாயார், வேணுகோபாலன் சன்னதி களுக்குச் சென்று மங்களாசாசனம் நடந்தது. ஆஸ்தானம் எழுந்தருளி பகல் 10:00 மணிக்கு ஸ்ரீ தேகளீச பெருமாளுடன் ஸ்ரீ ராமானுஜர், மணவாள மாமுனிகளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மணவாள மாமுனிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா, ஆஸ்தானம் எழுந்தருளி சேவை சாற்றுமுறை நடந்தது. ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !