உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன்னிப்போம்! மறப்போம்!

மன்னிப்போம்! மறப்போம்!

* மற்றவர்களின் குற்றங்களை மன்னிப்பது மனிதத்தன்மை. மறப்பது தெய்வத்தன்மை. பக்தியால் இந்த இரண்டையும் பெற முடியும்.  
* இன்பம், துன்பம் கலந்தது தான் வாழ்க்கை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால் அமைதியுடன் வாழ முடியும்.
* பசுக்கள், வேதங்கள், கற்பு நெறி தவறாதவர், சத்தியவழி நடப்பவர், துறவியர், தர்மசிந்தனை கொண்டவர் ஆகியோரால் தான் இந்த பூமி இடைவிடாமல் சுற்றுகிறது.            
* நிலவால் இரவும், சூரியனால் பகலும் ஒளி பெறுகிறது. நல்ல பிள்ளைகளால் குடும்பம் ஒளி பெறுகிறது.
* ஒருவர் செய்த தர்மச்செயலால் மண்ணுலகமும், விண்ணுலகமும் ஒளி பெறும். * குணமுள்ள மனைவி, மழலை மாறாத குழந்தை, உழைப்பில் கிடைத்த செல்வம் ஆகியவை அமிர்தத்திற்கு ஈடானவை.
* பசிக்கு உணவும், தாகத்திற்கு தண்ணீரும் தரும் தானத்திற்கு இணை வேறில்லை.              
* ஆறுமுறை பூமியை வலம் வருதல், பத்தாயிரம் முறை காசியில் நீராடல்,
நூறு முறை ராமேஸ்வரத்தில் குளித்தல் போன்ற புண்ணிய பலன்கள், பெற்ற தாயை ஒருமுறை வணங்கினால் கிடைக்கும்.
* பாம்புக்கு பால் வார்த்தாலும் அது விஷம் தான் கொடுக்கும். கீழ்த்தரமான மனிதருக்கு உதவி செய்தாலும் தீமையே ஏற்படும்.  நல்லவர் நட்பால் மனதில் அமைதி உண்டாகும்.
* தவம் செய்ய காட்டுக்குப் போகவோ, பட்டினி கிடக்கவோ வேண்டாம். குடும்பத்தில் மனைவி, மக்களுடன் வாழ்வதே சிறந்த தவம் தான்.
*  கீழ் நோக்கிப் பிடித்தாலும் தீப்பந்தம் மேல் நோக்கியே எரியும். அது போல உயர்ந்த மனம் படைத்தவர்கள் செல்வத்தில்  தாழ்ந்தாலும் எண்ணத்தால் உயர்ந்து நிற்பர். - வேண்டுகிறார் வாரியார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !