ஆகாயத்தலம்
UPDATED : ஜூலை 12, 2024 | ADDED : ஜூலை 12, 2024
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாக இருப்பவர் சிவன். சிதம்பரத்தை ஆகாயத்தலமாக குறிப்பிடுவர். இங்குள்ள பொற்சபையில் அண்ணாந்து பார்த்தால் வெட்ட வெளி தெரியும். ஆகாயத்தின் எல்லையைத் தொட்டவர் யாருமில்லை. அதுபோல கடவுளும் எல்லையற்றவர். அறிய முடியாத ரகசியமாக இருக்கிறார். இதுவே சிதம்பர ரகசியம்.