உள்ளூர் செய்திகள்

சொக்கப்பனை ஏன்

சிவன், முருகன் கோயில்களில் திருக்கார்த்திகையன்று இரவில் பனை, தென்னை ஓலைகளைக் கட்டாகக் கட்டி எரிப்பர். ஒளி வடிவில் கடவுளை தரிசிப்பதே இதன் நோக்கம். பனை மரத்தை நட்டு அதைச் சுற்றிலும் ஓலை கட்டுவர். அங்கு சிவபார்வதியை எழுந்தருளச் செய்வர். தீபாராதனை காட்டிய பின் பனை ஓலையில் பற்ற வைப்பர். தீ கொழுந்து விட்டு எரியும். பக்தர்களும் கையில் கொண்டு வந்த ஓலைகளை தீயில் இட்டு தீயசக்திகள் அழிந்து நன்மை பெற வேண்டும் என வழிபடுவர்.