உள்ளூர் செய்திகள்

திருப்புகழ் பிறந்த ஊர்

முருக பக்தரான அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் அவதரித்தார். இளமையில் பெண்ணாசையில் சிக்கி நோய்க்கு ஆளான இவர், திருவண்ணாமலை கோபுரத்தின் மீதேறி உயிர் விடத் துணிந்தார். முருகப்பெருமான் அவரை காப்பாற்றி 'முத்தைத்தரு' என அடியெடுத்துக் கொடுத்து பாட வைத்தார். சந்த நயம் மிக்க திருப்புகழ் பாடல்கள் பிறந்த ஊர் திருவண்ணாமலை. இதன் பின்னரே முருகன் கோயில்களுக்கு யாத்திரையாக நடந்தே தரிசனம் செய்து திருப்புகழ் பாடல்களைப் பாடத் தொடங்கினார்.