உள்ளூர் செய்திகள்

நம் வாழ்க்கை! நம் கையில்!

மனதில் நம்பிக்கை இருந்தால் நம் வாழ்க்கை நம் கையில்தான். கீழே உள்ள உதாரணங்களின் மூலம் இதை தெரிந்து கொள்ளலாம்.* ஒரு கிராமத்தில் மக்கள் மழை வேண்டி கடவுளிடம் வேண்டினர். அப்போது ஒருவர் மட்டும் குடை கொண்டு வந்தார். * தன் குழந்தையை மேலே துாக்கி போட்டு விளையாடினார் தந்தை. அதற்கு பயப்படாமல் தந்தையை பார்த்து சிரித்தது குழந்தை. * நாளை நாம் எப்படி இருப்போம் என யாருக்கும் தெரியாது. ஆனாலும் இரவில் அலாரம் வைத்து படுக்கிறோம். * நடப்பது எதுவும் நம் கையில் இல்லை என தெரிந்தும், எதிர்காலம் குறித்து திட்டம் தீட்டுகிறோம்.