உள்ளூர் செய்திகள்

சார்தாம்

இந்தியாவின் நான்கு திசையின் எல்லையிலும் கோயில்கள் உள்ளன. அவற்றை 'சார்தாம்' என்பர். சார் என்றால் 'நான்கு'. 'தாம்' என்றால் 'கோடி'. தென்கோடியில் ராம்நாத் என்னும் ராமேஸ்வரமும், வடகோடியில் பத்ரிநாத், மேற்கு கோடியில் சோமநாத், கிழக்கு கோடியில் பூரி ஜெகந்நாத்தும் உள்ளன. இதில் ராம்நாத்தும், சோம்நாத்தும் சிவன் கோயில்கள். பத்ரிநாத்தும், ஜெகந்நாத்தும் மகாவிஷ்ணு கோயில்கள்.