நடுநிலை தவறாதீர்!
UPDATED : ஜன 02, 2014 | ADDED : ஜன 02, 2014
* பயனில்லாத ஒரு வார்த்தை கூட வாயில்இருந்து வெளிவருதல் கூடாது. இதற்கு மிகுந்த விழிப்புணர்வு தேவை.* தெய்வ வசத்தால் தானாகக் கிடைத்ததை கொண்டு மகிழ்ச்சியோடு வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.* உலகம் போற்றினாலும், பழி தூற்றினாலும் மனதில் வாங்கிக் கொள்ளக் கூடாது. நடுநிலையில் இருக்கப் பழகுங்கள்.* கருமித்தனம் ஒருவனுடைய எல்லா நற்குணங்களையும் அழித்துவிடும் தன்மை கொண்டது.- ஆதிசங்கரர்