சொந்தக் காலில் நில்லுங்கள்
UPDATED : ஆக 01, 2016 | ADDED : ஆக 01, 2016
* யாரிடமும் எதையும் எதிர்பார்த்து காத்திருக்காதீர்கள். உழைப்பின் மூலம் சொந்தக் காலில் நிற்கப் பழகுங்கள்.* பிறர் உங்களைக் குற்றம் சொல்லும் விதத்தில் நடப்பது கூடாது. கடமையைக் கண்ணாக மதியுங்கள்.* கற்ற நல்ல விஷயங்களை மறக்காமல் வாழ்வில் கடைபிடிப்பவனே அறிவாளி.* செல்வமும், ஆயுளும் தாமரை இலை தண்ணீர் போல நம்மை விட்டு நிலையில்லாமல் ஓடி விடும்.* மரணத்தைக் கண்டு அஞ்சாத மனிதனே வீரன்.- ஜெயேந்திரர்