மனதாலும் நினைக்காதீர்!
UPDATED : பிப் 21, 2016 | ADDED : பிப் 21, 2016
* துன்பம் இல்லாமல் இன்பமாக வாழ விரும்பினால் மனதால் கூட பிறருக்கு தீங்கு நினைப்பது கூடாது.* பாவம், புண்ணியம் இரண்டையும் பிறரிடம் கூறுவதால் அதன் தீவிரத் தன்மை குறைந்து விடும். * தன்னைத் தானே சோதித்துக் கொள்பவன் தீமையில் இருந்து விரைவில் விடுபடுவான். மனத்தூய்மை பெற்று நற்செயலிலும் ஈடுபடுவான். * இல்லை என்று தன்னை மறுக்கும் நாத்திகனையும் காப்பாற்றும் பொறுப்பு கடவுளுக்கே இருக்கிறது. * விலங்கு உணர்ச்சியில் இருந்து மனிதனை உயர்த்துவது ஆன்மிகம். -வாரியார்