உள்ளூர் செய்திகள்

உள்ளம் உருகட்டுமே!

* உருகிய தங்கத்தில் நவமணிகள் பதிவது போல, உருகிய உள்ளத்தில் கடவுளின் அருள் பதிந்து விடும்.* சிந்திக்காமல் செயல்படுவது மூடத்தனம். எதையும் சிந்தித்துச் செய்வது நல்லது.* உடம்பின் அளவுகோலாக இருப்பது கண். அதைக் கொண்டே ஒருவரின் குணத்தைக் கண்டுபிடித்து விடலாம்.* பிள்ளைகள் பெற்றோரின் கண்ணீரைத் துடைக்க முயல வேண்டுமே தவிர, அதிகப்படுத்தக் கூடாது.* ஒருவர் புகழும் போது மகிழ்ச்சி அடையாத மனிதன், இகழ்ந்து பேசும் போதும் கவலை கொள்வதில்லை.- வாரியார்