லட்சியத்துடன் வாழ்வோம்
UPDATED : ஆக 10, 2014 | ADDED : ஆக 10, 2014
* உள்ளத்தூய்மையோடு உணவருந்தினால் மனதில் நல்ல எண்ணம் உண்டாகும்.* யானையைப் போல குளிக்கவும், தேனீயைப் போல உழைக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.* மனதால் செய்த பாவம் தியானத்தாலும், வாக்கால் செய்த பாவம் கடவுளைத் துதிப்பதாலும் நீங்கி விடும்.* பயிருக்கு முள்வேலி இடுவது போல, தேடிய பணத்திற்கு ஒருவர் செய்த தர்மமே வேலியாகும்.* மனிதன் லட்சியத்துடன் வாழ வேண்டும். லட்சியமில்லாத வாழ்க்கை மிருகநிலைக்கு ஒப்பாகும்.- வாரியார்