மகான்கள் அவதாரம் ஏன்?
UPDATED : நவ 10, 2014 | ADDED : நவ 10, 2014
* பெற்றோரின் குணமே பிள்ளைகளுக்கும் வரும். குழந்தைகள் நல்லவர்களாக வளர்வது பெற்றோரைப் பொறுத்ததே. * உடல் அழுக்கு தீர நீராடுவது போல, மன அழுக்குகளான ஆசை, கோபம் நீங்க கடவுள் பக்தியில் ஈடுபட வேண்டும். * எங்கிருந்து வந்தோம், இனி எங்கே செல்ல வேண்டும் என்று மனிதன் உயிரைப் பற்றிச் சிந்திப்பதே ஞானம். * வெயில் அதிகமாகும் போது வெம்மை தணிய மழை வருவது போல, அநீதி அதிகரிக்கும் போது நீதியை நிலைநாட்ட மகான்கள் அவதரிக்கிறார்கள். - வாரியார்