அன்பே சிறந்த ஆயுதம்
UPDATED : மார் 10, 2014 | ADDED : மார் 10, 2014
* இறைவனே நமக்கு அடைக்கலம். அவனே நம் விதியை நிர்ணயிக்கிறான்.* அநீதியைச் செய்பவனைப் போல, அதைக் கண்டு பொறுப்பில்லாமல் ஒதுங்குபவனும் குற்றவாளியே. * பல சமயத்தில் அறிவு நமக்கு வழிகாட்டுவதில்லை. அப்போதெல்லாம் நம்பிக்கையே துணை நிற்கிறது. * அன்பை விடச் சிறந்த ஆயுதம் வேறில்லை. அதுவே அனைவரையும் வெல்லும் சக்தி படைத்தது. * தன்னலம் இல்லாமல் வாழ்வதே ஒழுக்கமாகும். கோழைகளால் அதைப் பின்பற்ற இயலாது. - காந்திஜி