அன்பால் வெல்லுங்கள்
UPDATED : அக் 10, 2013 | ADDED : அக் 10, 2013
* கோபத்தைக் கோபமின்மையால் வெல்ல வேண்டும் என்கிறார் புத்தர். பதிலுக்குப் பதில் என்று கோபப்பட்டால் எதிரிக்கும் மட்டுமில்லாமல், நமக்குமே தீங்கு செய்து கொள்கிறோம்.* இடைவிடாத பயிற்சி செய்தால் யாரும் கோபத்தை அடக்கிக் கொள்ள முடியும். மனதில் அன்பு மலர்ந்து விட்டால் கோபம் தானாக மறைந்து விடும்.* குற்றம் செய்வதில் தான் அவமானம் இருக்கிறதே தவிர, அதற்காக தண்டனை பெறுவதில் இல்லை.* சந்தேகம் கொள்வது கண்ணியமான பண்பு அல்ல. ஏமாற்றுவதும் நீண்டநாள் நிலைத்திருக்க முடியாது.* சபதம் செய்து விட்டு அதை மீறுவதை விட, சபதம் செய்யாமல் இருப்பது நல்லது. சபதம் ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு துணை நிற்கிறது.* மற்றவர்களை தாழ்ந்தவர்கள் என்று எண்ணுவது தவறு என்பதை விட பாவச்செயலாகும். - காந்திஜி