பெருமைப்பட வாழுங்கள்
UPDATED : நவ 11, 2015 | ADDED : நவ 11, 2015
* மனிதன் தன்னை பெருமைக்கு அர்ப்பணிக்க வேண்டுமே தவிர, இழிவுக்கு அடிமையாக்கி விடக்கூடாது.* நல்லெண்ணம் என்னும் விதை சிறியது தான். ஆனால், அது மரமாகி நிழல் தரும் போது பெறும் பயன் அளவில்லாதது.* சினம் அற்ற மனம் உள்ளவனே நெஞ்சுரம் மிக்கவன். அவன் உயிருக்கு ஆபத்து ஏதும் உண்டாவதில்லை.* நல்ல நூல்களைத் தொடர்ந்து படித்தால் உயர்ந்த பண்பும், நிறைந்த அடக்கமும் ஏற்படும்.* அன்போடு வழங்குவது கூழாக இருந்தாலும், அதை அமுதமாக கருதி உண்ண வேண்டும்.மகாவீரர்