ஒழுக்கமே உயிர்நாடி
UPDATED : செப் 01, 2015 | ADDED : செப் 01, 2015
* தர்மமே உலகின் சிறந்த மங்கலப் பொருளாகும். ஒழுக்கமும், இரக்கமும் அதன் உயிர் நாடியான குணங்கள். * உண்மை பேசுபவன், குரு போல வழிகாட்டுபவன், தாய் போல அன்பு செலுத்துபவன் ஆகியோருடன் விரும்பி நட்பு கொள்ள வேண்டும். * தினமும் மவுனமாய் தியானம் பழகினால் மனம் கலங்காத நிலையை அடைய முடியும். * அடைக்கலம் கேட்டு வருவோரைப் பாதுகாத்தல், அஞ்சுவோருக்கு அபயம் அளித்தல் ஆகியவை சிறந்த தர்மங்களாகும். - மகாவீரர்