கடமை தவறாதே
UPDATED : ஏப் 13, 2015 | ADDED : ஏப் 13, 2015
* எப்போதும் அமைதியுடன் இரு. அமைதி காப்பதே வலிமையின் அடையாளம்.* பணி என்பது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை. மனம் ஒன்றி செய்தால் அவரது அருளுக்கு உரியவனாவாய்.* தனியாக யாரும் இருக்க முடியாது. கடவுள் நம்முள் இருந்து வழி நடத்துகிறார்.* கடவுளுக்கு நன்றி செலுத்திய பின்பு உண்ணுங்கள்.* எங்கும் தப்பி ஓட நினைக்காதே. உலகில் இருந்தபடி கடமையைத் தவறாமல் செய்து கொண்டிரு.* குறை இல்லாத மனிதன் யாருமில்லை. அதனால், பிறரிடமுள்ள நிறையை மட்டும் பார்.-ஸ்ரீஅன்னை