வெற்றி அடைவது எப்படி?
* நீ விரும்பியதையெல்லாம் கடவுள் தரமாட்டார். உன் தகுதிப்படியே தான் அவர் அருள்புரிகிறார். கடவுளின் அருளுக்கு உன்னைப் பாத்திரமாக்கிக் கொள்.* முதலில் உன்னுள் உள்ள பொய்யானவை, இருளானவை ஆகியவற்றையெல்லாம் கண்டுபிடித்து, அவற்றை பிடிவாதமாக விலக்கி வெளியேற்று. அப்போதுதான் நீ ஒளி பெற்ற தெய்வ சக்தியை உணர முடியும்.* 'நீங்கள் தான் எனக்கு வேண்டும் என்று கடவுளிடம் உறுதிப்பாட்டுடன் சொல்வீர்களானால், உங்களை எப்போதுமே நேர்மையாக இருக்கச் செய்யும்படியான சூழ்நிலைகளை கடவுளே அமைத்துத்தருவார்.* தெய்வ சக்தியை, உன்னுள் பிரதிஷ்டை செய்ய விரும்பினால், நீ உடல் எனும் கோயிலைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.* உங்கள் கரங்களை எதிரிகளிடம் நீட்டாதீர்கள். அவர்கள் முன் அப்பழுக்கில்லாமல் நடந்து கொள்ளுங்கள். நேர்மைக்கும், நியாயத்திற்கும், அடக்கத்திற்கும், வீரத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குங்கள். அப்போது வெற்றி உங்கள் அருகில் வரும்.- ஸ்ரீஅன்னை