உள்ளூர் செய்திகள்

மறுமை நாள்

* மறுமை நாள் வந்தே தீரும். அதில் சந்தேகம் இல்லை.* ஒருவரின் பாவச்சுமையை மற்றொருவர் சுமக்க மாட்டார். * பிறருக்கு நல்லது நடக்க வேண்டும் என நினையுங்கள். * கொடுமையையும் அநீதியான செயல்களையும் யார் மன்னிக்கிறாரோ அவருக்கு கூடுதல் நன்மை உண்டு. * அநீதி இழைக்கும் கொடுங்கோல் அரசனிடத்தில் சத்திய நெறியை கூறுவதே சிறந்த அறப்போர். * அளவு கடந்த மகிழ்ச்சியினால் சத்தியப்பாதையில் இருந்து விலகிவிட வேண்டாம். * கோபம் வரும்போது உணர்ச்சிவசப்பட்டுத் தகாத செயலில் இறங்கிவிடாதீர்கள். * தானியத்தை பதுக்கி வைப்பவனும் குற்றவாளி ஆவான். * பதவியில் இருக்கும்போது உங்களுக்கு உரிமையில்லாத பொருளை பயன்படுத்தாதீர்கள். * மனிதர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக்கொள்கின்றனர்.* பெற்றோரை சபிப்பது பெரும் பாவங்களில் ஒன்றாகும். * நோயையும் நரக வேதனையையும் தடுக்கும் கேடயமாக நோன்பு இருக்கிறது. * சூரியன் சந்திரனைச் சென்றடைய முடியாது. இரவு பகலை முந்திவிட முடியாது. ஒவ்வொன்றும் தத்தமது மண்டலங்களில் நீந்தி கொண்டிருக்கின்றன. * மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும். * ஒருவர் மகானாக வாழாவிட்டாலும் நல்ல பண்புள்ள மனிதனாகவாவது வாழ வேண்டும்.-பொன்மொழிகள்