மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
பல்லடம் : பல்லடம் கடைவீதி மாகாளியம்மன் கோவிலில் திருப்பணி நடந்து வருகிறதுஇதனை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் உள்ள அரசு, வேம்பு, தென்னை உள்ளிட்ட மரங்கள் வெட்டி அகற்றும் பணி நடந்தது. இது குறித்து சுட்டிக்காட்டிய 'தினமலர்' நாளிதழ் நவீன தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி, மரங்களை மாற்று இடத்தில் நடவு செய்ய வேண்டும் என்ற யோசனையை குறிப்பிட்டிருந்தது.இதனை தொடர்ந்து, அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில், மரங்கள் மறுநடவு செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, சுல்தான்பேட்டை சேர்ந்த மரம் காவலர் கனகராஜ் வரவழைக்கப்பட்டு, பொக்லைன் உதவியுடன் மரங்கள் வேருடன் பெயர்த்து எடுக்கப்பட்டன. லாரிகளில் ஏற்றப்பட்ட மரங்கள், மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவில் வளாகத்தில் மறு நடவு செய்யப்பட்டன. ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் மரங்களுக்கு மறுவாழ்வு கிடைத்தது.
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025