உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், எடமச்சி கிராமத்தில், 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.இந்நிலையில், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் 2,000 ஏக்கர் பரப்பளவில், நவரை பருவ நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது, இதற்கான அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.அவ்வாறு அறுவடை செய்யப்படும் நெல்லை விற்பனை செய்ய, இப்பகுதியில் நெல் கொள்முதல் இல்லாமல் இருந்தது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, நீண்ட தூரம் உள்ள உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு எடுத்து சென்று விற்பனை செய்து வந்தனர்.இதனால், விவசாயிகளுக்கு நேரம் மற்றும் பண விரயமும் ஏற்பட்டு வந்தது. இதை தவிர்க்க, எடமச்சியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளிவந்ததையடுத்து, எடமச்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.எடமச்சி ஊராட்சி தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.அதேபோல, ரெட்டமங்கலம், அருங்குன்றம், புல்லம்பாக்கம் ஆகிய கிராமங்களிலும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. ரெட்டமங்கலம் ஊராட்சி தலைவர் சுஜாதா, ஒன்றிய தி.மு.க., செயலர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை