தினமலர் செய்தி: பணிகள் துவக்கம்
மேலுார்: கடுமிட்டான் பட்டி பெரிய அருவியில் ரூ.2.60 கோடியில் புனரமைப்பு பணிகள் நடக்கிறது. இதில் தண்ணீர் வெளியேறும் கால்வாய் தரமற்ற முறையில் கட்டப்படுவதால் வெடிப்பு ஏற்பட்டு சிமென்ட் பூச்சுகள் கையால் தொட்டாலே உதிர்கிறது. இப்பாதிப்பு குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து ஏ.இ.,ராம்குமார், உதவிப் பொறியாளர் கார்த்திக் மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் நேரில் சென்று கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர். ஒப்பந்ததாரிடம் தரமான முறையில் கட்டும்படி வலியுறுத்தினர்.