மணல் குவியல் அகற்றம்
நடவாவி உத்சவத்தையொட்டி, அய்யங்கார்குளம் கிராம எல்லையில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு வரவேற்பு அளிக்கும் இடத்தில் இடையூறாக கொட்டியுள்ள மணல் அகற்றப்படாமல் இருந்தது.நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில், நேற்று பொக்லைன் இயந்திரம் உதவியுடன் மணல் குவியல் அகற்றப்பட்டது.