உள்ளூர் செய்திகள்

 டவுட் தனபாலு

சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி: மகளிர் உரிமைத்தொகை, 5,000 ரூபாய் வழங்கியதை வரவேற்கிறேன். மக்களுக்கு நேரடியாக அடிப்படையான மாத சம்பளம் போல, மாதம் 5,000 ரூபாய் வழங்க மாநில அரசு முயற்சிக்க வேண்டும். நேரடியாக வங்கி மூலம் பணம் செலுத்தும்போது, சுற்றுவட்டார பொருளாதாரம் மேம்படும். கிராமத்தில் புதிய தொழிற்சாலைகளே இல்லாத நிலையில், மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை வழங்குவது கைகொடுக்கும். டவுட் தனபாலு: அது சரி... 'யாரும் வேலை, வெட்டிக்கு போக வேண்டாம்... 1ம் தேதியானா அரசு பணம் அனுப்பிடும்... எல்லாரும் மோட்டு வளையை பார்த்துட்டு படுத்து கிடங்க'ன்னு சொல்றீங்களோ... கிராமங்கள்ல எல்லாரும் உழைக்காம இருந்துட்டா, நெற்பயிர்கள் எல்லாம் தானா வளர்ந்துடும்னு நினைக்கிறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது! lll பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க., ஆட்சியில், காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத்தொகை போன்றவை வரவேற்கக் கூடியவை. ஆனால், தமிழகத்தில் மது குடிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, இந்திய அளவில் முதன்மை மாநிலமாகி வருவது ஏற்புடையதல்ல. இது, மனித வளத்திற்கு உகந்தது அல்ல. டவுட் தனபாலு: மது குடிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் தான், காலை உணவுத் திட்டம், மகளிருக்கு உரிமைத்தொகை, அவ்வளவு ஏன்... இப்ப கூட, 5,000 ரூபாயை அள்ளி விட முடிஞ்சிருக்கு... மது விற்பனை வருவாய் இல்லாமல், நலத்திட்டங்களை செய்யும் நிர்வாகத்திறன் தி.மு.க., அரசுக்கு இல்லையோ என்ற, 'டவுட்'தான் வருது! lll ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படவில்லை; யாரோ இயக்குகின்றனர். அதனால், ம.தி.மு.க.,வுக்கு அங்கீகாரமே இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும். அதை முன்கூட்டியே அறிந்து தான், திருச்சி லோக்சபா தொகுதியில் தனி சின்னத்தில் போட்டியிட்டு, ம.தி.மு.க.,வை காப்பாற்றினோம். தேர்தல் நேரத்தில் நான் யாருக்கெல்லாம் உதவினேனோ, அவர்கள் எல்லாம் ம.தி.மு.க.,வை அழித்து விடலாம் என நினைத்து, என்னை பற்றி அவதுாறு பரப்பினர். ம.தி.மு.க.,வை யாராலும் அழிக்க முடியாது. டவுட் தனபாலு: தங்களது வெற்றிக்கு அச்சுறுத்தலா இருக்கும் கட்சியை தான், எதிர்க்கட்சிகள் அழிக்க பார்க்கும்... ஆனா, ஆளும் கூட்டணியில் பிள்ளை பூச்சி மாதிரி ஒரு ஓரமா இருக்கும் உங்க கட்சியை அழிக்க, யாராவது நேரத்தை வீணடிப்பாங்களா என்பது, 'டவுட்'தான்! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

S.kausalya
பிப் 22, 2026 16:23

மாற்று திறனாளிகளின் அடிப்படை தேவையை கூட நிறைவு செய்ய பணம் இல்லை என்று சொல்லி கொண்டு இப்படி ஒவ்வொரு மகளிருக்கும் அரசு பணத்தில் இருந்து ₹5000 கொடுத்து உள்ளார்கள். இதில் அரசு வேலையை செய்பவருக்கு மட்டும் தான் இந்த தொகை கொடுக்க படவில்லை என நினைக்கிறேன் மற்றபடி தனியார் நிறுவன ஊழியர்கள் முதல் பூ கட்டி விற்பவர், வீட்டு வேலை செய்பவர் என எல்லோருக்கும் இந்த தொகை அளிக்க படுகிறது. அம்மாவுக்கு இந்த தொகை ,பாட்டிக்கு முதியோர் தொகை, மகளுக்கும் மகனுக்கும் ஒரு தொகை என கொடுத்து விட்டு ., நியாமாக உதவி செய்ய வேண்டியவர்களுக்கு நிதி இல்லை என்று அவர்களை விரட்டி அடிக்கிறார்கள். அதை எல்லாம் கார்த்திக சார் பார்க்க வேண்டும்.


duruvasar
பிப் 22, 2026 12:06

சைக்கோ எதற்காக அவ்வப்போது மதிமுக என்று ஒரு கட்சி இருகின்றது என கூவுகிறார்.


D.Ambujavalli
பிப் 22, 2026 06:22

1000 கொடுத்தால் டாஸ்மாக் செலவுக்குத்தான் போதும் இனி 10000 கொடுத்துவிட்டு நல்ல போதை உள்ள கஞ்சா etc., வியாபாரத்தையும் அரசே எடுத்து நடத்தினால் அந்த வழியிலும் கஜானா நிரம்பும் மக்களும் போதையில் அப்படியே உங்கள் புகழ் பாடிக்கொண்டு தேர்ந்தெடுப்பார்கள் உழைப்பு, உடல் வளத்தால் என்ற கேட்ட பழக்கமெல்லாம் சுத்தமாக ஒழித்த ‘நல்லாட்சியை’ ஆயிரம் ஆண்டு சாதனையாக விளம்பரப்படுத்திக்கொள்ளலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை