வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்த தேர்தல் நமக்கு முக்கியமான சில பாடங்களை எடுத்துள்ளது 1. பணம் கொடுத்தால் ஓட்டு வாங்கி ஜெயித்து கொள்ளையடிக்கலாம் என்ற எண்ணம் பொய்த்தது. 2. பணம் வாங்கிக்கொண்டு மக்கள் அவர்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். 3. ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் ஜெயிக்கலாம் என்று த வெ க சிறப்பாக செய்துள்ளது. மேலும் பல அறியாத முகங்களை பணம் வாங்கிட்டு சீட்டு கொடுக்கவில்லை. ஆட்டோ டிரைவர் ராயபுரம் தொகுதி உதாரணம். 4. அராஜகம் ஊழல் சட்டம் ஒழுங்கு சீர்கேடு போதைப்பொருள் கலாசார அரசு முடிவு கட்டப்பட்டது. குறிப்பாக முதலமைச்சர் தோல்வி மக்களின் கடுமையான எதிர்ப்பை உணர்த்தியது. 5. கருத்து கணிப்பு தேர்தலுக்கு பின் கருத்து கணிப்பு இதெல்லாம் பணம் கொடுத்து பரப்பப்பட்டவை என்று தோலுரித்து காட்டியது இனிமேல் கருத்து கணிப்புன்னு எவனாவது பேசுவான்? ஒருத்தர் அரசியலே பேசமாட்டேன் என்று சவடால் விட்டாரே. இப்போ மூஞ்சியை எங்க போய் வச்சிக்குவார்? கருத்து கணிப்பை தடை செய்யணும் தேவைஇல்லாமா மக்களை குழப்பக்கூடாது. குழப்பினாலும் மக்கள் தெளிவா இருப்பாங்க. 6. ஒரு கட்சியை ரெண்டு திராவிட கட்சிகளும் சேர்ந்து எதிர்த்தும் ஒன்னும் ஜெயிக்க முடியல .மக்கள் சக்தி ஒன்று திரண்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதை நன்கு புரியினைத்துள்ளது.
அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். கருத்துக் கணிப்புகள் பொய்க்கலாம் என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தொலைக்காட்சி பேட்டியில், இந்த கட்சி ஆட்சிக்கு வந்தால், நான் இனிமேல் அரசியலே பேசமாட்டேன் என்றெல்லாம், அவசியமில்லாத சவடால்களை உதிக்கக் கூடாது என்ற பாலபாடத்தை, அரசியல் விமர்சகர் ஒருவருக்கு உணர்த்தியுள்ளது. அரசியல் வெற்றியை, தவறாக கணித்தது தவறல்ல ஆனால், த.வெ.க வெற்றி பெற்றால், இனிமேல் அரசியலே பேச மாட்டேன் என்று கூறிவிட்டு, அவ்வாறு கூறியதற்கு வருத்தம்கூட தெரிவிக்காமல், மீண்டும் அரசியல் பேசலாமா அண்ணா ? புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி