உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  இன்ஸ்டா விளம்பரத்தால் ரூ.30,000 இழந்த விவசாயி

 இன்ஸ்டா விளம்பரத்தால் ரூ.30,000 இழந்த விவசாயி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: மானூரை சேர்ந்த விவசாயி, இன்ஸ்டாகிராமில் பழைய, 5 ரூபாய் நோட்டுக்கு, ரூ.10 லட்சம் கிடைக்கும் என வந்த விளம்பரத்தை நம்பி, 30,000 ரூபாய் அனுப்பி ஏமாற்றமடைந்தார். விவசாயி வீட்டில் இருந்தபோது அலைபேசியில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தார். அதில் பழைய 5 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என விளம்பர அறிவிப்பு வந்தது. பணத்தை பெறுவதற்கு வரி மற்றும் நுழைவு கட்டணமாக ரூ.30,000 செலுத்த வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதை 10ம் வகுப்பு பயிலும் தனது மகனிடம் விவசாயி காட்டினார். அவரும் அது உண்மையாக இருக்கும் என கூறினார். இதையடுத்து விவசாயி அறிவிப்பில் வந்த அலைபே சி எண்ணுக்கு தன் சேமிப்பு, ரூ.30,000 ஐ அனுப்பினார். அதன் பின் அந்த மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விவசாயி, மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
பிப் 01, 2026 12:59

கடைக்கோடி விவசாயி ஏமாறும் வகையில் நாட்டில் மொபைல் இண்டர்நெட் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சீக்கிரமே வல்லரசாயிடுவோம்.


பிரேம்ஜி
பிப் 01, 2026 08:19

சூப்பர்!


புதிய வீடியோ