உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / தின்பண்ட பாக்கெட்டில் எண்ணெயில் பொறித்த எலி

தின்பண்ட பாக்கெட்டில் எண்ணெயில் பொறித்த எலி

நாட்றம்பள்ளி; குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்த சிப்ஸ் பாக்கெட்டில் எலி கிடந்ததால், பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி செல்லப்பாண்டி. இவர், தன் குழந்தைகளுக்கு வீட்டின் எதிரில் உள்ள டீ கடையில், 'ஸ்பாட் ஆன் ஐதராபாத் வெஜ் பிரியாணி' என்ற பெயரில், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட, நான்கு சிப்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி கொடுத்தார். வீட்டிற்கு வந்து, அதில் ஒரு பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது, முழு எலி ஒன்று எண்ணெயில் பொறிக்கப்பட்டு அடைக்கப்பட்டிருந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Padmasridharan
செப் 20, 2025 18:22

இது கண்ணுக்கு தெரியுது, கண்ணுக்கு தெரியாத எத்தனையோ கலக்கறாங்க. சுவை மட்டும் நல்லா இருந்தா சூடா வெளியில கிடைக்கிற அத்தனையும் வாங்கி சாப்பிட அரசு பழக விட்டுருச்சி. சம்பாதிங்க, வரி கட்டுங்க, வெளியில குடிச்சும் சாப்பிட்டும் உடல் நிலைய கெடுத்துகிட்டு மருத்துவமனைக்கும் செலவிடுங்க. இதுதான் இப்போதைய ட்ரெண்டா இருக்கு. One has to know what raw materials are used in preparing foods rather than taste of foods taken in


ராமகிருஷ்ணன்
செப் 19, 2025 11:34

எலி ரொம்ப சின்னதாக இருக்கு, சைனா செல்ல இருந்த பாக்கெட் இந்தியாவுக்கு அனுப்பி விட்டனரா


அப்பாவி
செப் 19, 2025 08:05

கண்டத கடைல வாங்கித் தின்னு நாசமாப்போங்க. இந்தியாவுல எந்தப் பொருளுக்கும் உத்தரவாதமில்லை.