உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / பிறப்பு சான்றிதழ் வழங்க மாநகராட்சிக்கு 40 நாள் ஆகிறது: ஆன்லைனுக்கு மாறியும் ஒழியாத லஞ்சம்

பிறப்பு சான்றிதழ் வழங்க மாநகராட்சிக்கு 40 நாள் ஆகிறது: ஆன்லைனுக்கு மாறியும் ஒழியாத லஞ்சம்

கோவை : கோவை நகர பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் குழந்தை பிறந்தால், அருகில் உள்ள மாநகராட்சி வார்டு அலுவலகம் சென்று, விண்ணப்பிக்க வேண்டும். சான்றிதழில் வர வேண்டிய குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி தெளிவாக குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும். அம்மா அல்லது அப்பா நேரில் வந்து பதிவேட்டில் கையெழுத்து போட வேண்டும். குழந்தை பிறந்த மருத்துவமனையில் இருந்து வந்த தகவலை வார்டு சுகாதார ஆய்வாளர் சரி பார்த்து, ஒப்புதல் வழங்குவார். உடனே, ஆன்-லைனில் டிஜிட்டல் சான்றிதழ் பதிவேற்றப்படும். பெற்றவர்கள் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்த வேண்டாம். இதுதான் நடைமுறை. இறப்பு சான்றிதழ் பெறுவதற்கும் இதே வழி தான். சில சமயம் பிறப்பு, இறப்பு சான்றிதழில் எழுத்துப்பிழை இருக்கும். பெற்றோர் அதை கவனிக்காமல் இருக்கலாம். குழந்தையை பள்ளியில் சேர்க்க போனதும் தவறு தெரிந்து விடும். பிழையான பிறப்பு சான்றிதழ் என்று கூறி, குழந்தைக்கு அட்மிஷன் தர மாட்டார்கள். சான்றிதழில் பிழைகளை திருத்தி தருவது, முகவரி மாற்றி தருவது போன்ற வேலை இருந்தால், மாநகராட்சியின் பிறப்பு - இறப்பு பதிவு அலுவலகத்தில் காட்டி ஒரு விண்ணப்பம் கொடுத்தால், பதிவேட்டை சரிபார்த்து, தவறை திருத்தி கொடுப்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமை. இது சில நிமிடங்களில் முடிகிற வேலை. ஆனால், முடியாது. ”நீங்க போங்க; வீட்டுக்கு கூரியர்ல அனுப்புவோம்” என்கின்றனர். கூரியர் வரும்போது வீட்டில் ஆள் இல்லை என்றால், மாநகராட்சிக்கே திரும்பி வரும். அது யாருக்கு சொந்தமானது என்று பதிவேட்டை பார்த்து, போன் போட்டு அம்மா அல்லது அப்பாவை நேரில் வரவழைத்து கொடுக்கலாம். ஆனால், கொடுப்பதில்லை. திரும்பி வந்த கூரியர் கடிதம் ஓரங்கட்டி வைக்கப்படுகிறது. இது தெரியாமல் வீட்டுக்கு இன்னும் சான்றிதழ் வரவில்லையே என்கிற பதைபதைப்பில் பெற்றோர் இருக்கின்றனர். சமீபகாலமாக பிறப்பு சான்றிதழ் வழங்க 40 நாட்கள் வரை காக்க வைக்கின்றனர். இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு போனாலும், ஏதாவது ஒரு ஆவணம் இல்லை என்று கூறி, திருப்பி அனுப்புகின்றனர். வீடு சென்று ஆவணம் எடுத்து வந்து கொடுத்தால், அதன் பிறகு ஆன்-லைனில் அந்த சான்றிதழை பதிவேற்ற இழுத்தடிக்கின்றனர். அதிகாரிகள் ஊழியர்கள் கேட்கும் தொகையை கொடுத்தால் மட்டுமே சான்றிதழ் பதிவேற்றப்படும். அட்மிஷனுக்கு பிறப்பு சான்றிதழ் எப்படியோ, அது போல இன்சூரன்ஸ், பத்திரப்பதிவு போன்ற முக்கிய வேலைகளுக்கு இறப்பு சான்றிதழ் அவசியம். ஆகவே, ஏழை, நடுத்தர மக்கள் வேறுவழியின்றி, எவ்வளவு கேட்டாலும் கண் கலங்க கொடுத்து விட்டு, சான்றிதழை வாங்கி செல்கின்றனர். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் நமது நிருபர் இதை விவரித்து, என்ன செய்ய போகிறீர்கள்? என்று கேட்டார். அவர் பொறுமையாக, ''நானே போய் விசாரித்து ஆய்வு செய்கிறேன். விண்ணப்பங்கள் நிலுவை இருந்தால், உடனே பைசல் செய்ய நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Chinnamanibalan
மே 29, 2026 20:29

வருவாய் வட்டாட்சியரால் பட்டா வழங்கப்பட்ட ஒரு நிலத்துக்கு, கணினி பதிவேற்றம் வழங்க இரண்டு ஆண்டுகளுக்கு மேலாவது மிகவும் கொடுமை. லஞ்சம் இல்லாமல் வருவாய்த் துறையில் எதுவும் இல்லை. இதற்கு விடிவுதான் எப்போது?


அப்பாவி
மே 29, 2026 20:08

இது அம்பது வருசமா புரையோடின கேன்சர். இப்போதைக்கு சரியாகாது.


Subash BV
மே 29, 2026 15:21

Matter is simple. Govt has to understand the logic. If a child is born in a hospital or nursing home. The concerned authorities have to collect all the information and send it to the govt birth/death records maintaining authority. Let the authority take a hard copy and send it through speed post. GOVT SHOULD SET A TIME LINE. IF THE AUTHORITIES DELAY IT, SUSPEND THE CONCERNED IMMEDIATELY. IF THE HOSPITAL OR NURSING HOME MISUSES THEIR AUTHORITY, TAKE CRIMINAL ACTION. If the child is born in a house, ask the parents to give an affidavit and upload it online. Concerned authorities should send a hard copy through the speed post. Any misuse take criminal action. CM SHOULD HAVE THE WILL TO IMPLIMENT. NO PUBLIC, GOVT SERVENTS SHOULD CONTACT EACH OTHER. ELSE DECIDE YOURSELF.


Ayyasamy
மே 29, 2026 13:43

Filthy government officers, dismiss the related officers immediately. And replace with new member with knowledge transfer.


Muralidharan S
மே 29, 2026 11:21

ஆன்லைன் வில்லங்க சான்றிதழுக்கும் இதே நிலைமைதான்.. இதற்கும் இது பணம் கட்டி வாங்கும் சான்றிதழ்.. ஆனாலும் வராது.. கண்ட்ரோல் அதிகாரிகள் கையில் வைத்து உள்ளனர்.. ஆபீசுக்கு நேரில் சென்று வெளியே கடை வைத்து இருப்பவர் மூலம் அணுகி, அவர் கடையில் குடுக்க வேண்டியதை கொடுத்தால்தான் கிடைக்கிறது.. இது எனக்கு ஏற்பட்ட அனுபவம்.. இத்தனைக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கு மிகவும் அதிக சம்பளம், இதர சலுகைகள், ஓய்வுகால ஊதியம். அத்தனையும் இருந்தும், பணம் பணம் என்று அலையும் பலர்.. எந்த ஆட்சி வந்தாலும், மாறினாலும் இவர்களை மட்டும் யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்ற ஒரு நிலைமைக்கு காரணம் நமது நாட்டின் தண்டனை சட்டம் மிகவும் அற்பமானது.. லஞ்சம் வாங்குபவனுக்கு கைகள் வெட்டப்படும்.. பாலியல் குற்றம் செய்பவர்களுக்கு அத்தகைய செயலில் ஈடுபடவைக்கு உறுப்பு வெட்டி எறியப்படும். கொலை கொள்ளை அடிப்பவனுக்கு நடு மைதானத்தில் வைத்து பொதுமக்கள் பார்வையில் சிரச்சேதம் செய்யப்படும் என்பது போன்ற இஸ்லாமிய நாட்டு சட்டங்கள் போல இருந்தால் மட்டுமே இந்தியா முன்னேறிய நாடுகளின் வரிசையில் இடம்பெறும்.. லஞ்சம் ஊழல் செய்வோர் இருக்கும் வரை இந்தியா மூன்றாம் தர நாடுகள் வரிசையில் தான் இருக்கும்...


ديفيد رافائيل
மே 29, 2026 08:04

லஞ்சத்தில் ஊறிய அரசு அதிகாரிகள் தீடீரென மாற சொன்னா கஷ்டமாக இருக்கும்போல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை