உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  தி.மு.க.,வுக்கு பாதிரியார் ஓட்டு சேகரிப்பு; மக்கள் எதிர்ப்பு

 தி.மு.க.,வுக்கு பாதிரியார் ஓட்டு சேகரிப்பு; மக்கள் எதிர்ப்பு

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம், புதுார் கிராமத்தில், தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டு சேகரிக்க சென்ற பாதிரியாருக்கு, மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அடுத்த புதுார் கிராமத்தில், மீனவ மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு, தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட்டை ஆதரித்து, அப்பகுதி பாதிரியார் அமல்ராஜ், ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அதற்கு அப்பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்கும்படி கூறிய பாதிரியாரிடம், 'எங்கள் ஓட்டு; எங்கள் உரிமை. கட்சி குறித்து பேசுவது பாதிரியாரின் வேலை கிடையாது. ஊரை நல்வழியில் கொண்டு செல்வதுதான் பாதிரியாரின் வேலை' எனக்கூறிய வீடியோ வேகமாக பரவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

P.K.Mennon.
ஏப் 18, 2026 21:34

இயேசுவே யூதமத்தை எதிர்த்து அரசியல் செய்தவர்தானே


பச்சையப்பன் கோபால் புரம். எனிக்கி இன்னமும் அண்டா கிடைக்கல.
ஏப் 18, 2026 14:50

பாத்துக்கங்க ! இவங்க ஆட்சிக்கி வர்ர முன்னாடாயே மநச்சார்பின்மையை அடித்து விரட்டி அப் பாவி பாதிரியாரை கொடுமை பண்ணாராங்க.அன்னிக்கி வாடி கன் போப்பு கூட பிரசாரத்துக்கு வர்ரேன்னு சொன்னாறு ஆனா எங்க தங்க தள்ளபதிதான் பெரிய மனசு பன்னி நீங்க அங்கிருந்தே கைய ஆட்டுங்க இங்க எனுக்கு ஆட்டைமேட்டிக்கா விழுந்துரும்னு சொன்னாறு.


KRISHNAN R
ஏப் 18, 2026 09:45

திருடர் கூடம்


பாரதி
ஏப் 17, 2026 16:07

சம உரிமை கிடைத்த கதை. ஏமாளிகளின் நாடு என்று ஒரு நாடு இருந்ததாம். அங்கே வாழ்ந்த மண்ணின் மைந்தர்களை கொள்ளையடிக்க வந்த ஒரு கூட்டம், இந்த ஏமாளி மக்களை கொள்ளையடித்துக் கொண்டு போவதற்கு பதிலாக இங்கேயே ஆட்சி செய்து கொண்டு கொள்ளையடிக்கலாம் போல இருக்கிறதே என்று ஆட்சி செய்யத் துவங்கினார்களாம். அப்பொழுது இரண்டாவதாக அங்கே கொள்ளையடிக்க வந்த ஒரு கொள்ளையர் கூட்டம், இந்த மண்ணின் மைந்தர்களையும் முதல் கொள்ளையர்களையும் வெற்றி பெற்று, தன்னுடைய கொள்ளையடிக்கும் ஆட்சியை ஏற்படுத்தினானாம். மண்ணின் மைந்தர்களுக்கு இவர்களிடமும் போராட வேண்டிய ஆனதாம். இந்த இரண்டாவது கொள்ளையன் சொன்னானாம், "நீங்கள் இருவரும் ஒற்றுமையாக வந்தால் உங்களுக்கு சுதந்திரம் தருவேன்" என்று! பிறகு மண்ணின் மைந்தர்களும் முதல் கொள்ளையனும் ஒற்றுமையாக சென்று சுதந்திரம் கேட்டார்களாம். அவன் என்ன செய்தான், நீங்கள் ஆளுக்கு ஒரு பகுதியாக பிரித்து நாட்டை வைத்துக் கொள்ளுங்கள், அதேபோல நீங்கள் இருவரும் எனக்கு எப்போதும் அடிமையாக இருக்க வேண்டும். என்னுடைய விருப்பங்களே உங்கள் இருவருக்கும் சட்டமாக இருக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டு, நாட்டை இரண்டாக பிரித்துக் கொடுத்தானாம். மண்ணின் மைந்தர்களுக்கும் இரண்டாம் கொள்ளயனுக்கும் தனக்கும் சம உரிமை கிடைக்குமாறு சம உரிமைச் சட்டத்தை திறமையாக எழுதினானாம் இரண்டாவது கொள்ளையடிக்க வந்தவன்! அதுதான் ஏமாளிகள் நாட்டின் சம உரிமை சட்டமாம்! கதை நல்லா இருக்கு இல்லையா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை