உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி /  23 ஆண்டுகளுக்கு பின் தாயுடன் சேர்ந்த மகன்

 23 ஆண்டுகளுக்கு பின் தாயுடன் சேர்ந்த மகன்

கோவை: நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, 23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன், பஞ்சாபில் மீட்கப்பட்டு, தாயுடன் மீண்டும் இணைந்து உள்ளார். கோவை, நீலாம்பூரை சேர்ந்தவர் சுந்தரி. இவரது மூத்த மகன் பிரகாஷ், 2003ல், தன் 16வது வயதில் திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் கொத்தடிமையாக தவித்த பிரகாஷ் மீட்கப்பட்டு, பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் உள்ள தொண்டு நிறுவன காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருவது, சமூக ஆர்வலர் முத்தையா மூலமாக சமீபத்தில் சுந்தரிக்கு தெரியவந்தது. உரிய அடையாள ஆவணங்களை சமர்ப்பித்தால் மட்டுமே பிரகாஷை தமிழகத்திற்கு அனுப்ப முடியும் என, அங்குள்ள நிர்வாகம் தெரிவித்தது. சுந்தரியிடம் ஆவணங்கள் இல்லை. அதனால், கடந்த 13ல் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். இது குறித்து, கடந்த 14ல் நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, பிரகாஷின் ஆவணங்களை திரட்டவும், அவரை கோவை அழைத்து வரவும் கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து, கடந்த 25ம் தேதி சுந்தரி, சமூக ஆர்வலர் முத்தையாவுடன் சண்டிகர் சென்றார். அங்கு மகனை பார்த்து கண்ணீர் மல்க ஆர தழுவினார். மகனை விரைவாக ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க உதவியதுடன், தொடர்ந்து செய்திகளை வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு சுந்தரி தொலைபேசியில் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

N Prakash
ஜூலை 31, 2026 13:00

தினமலர் ஒரு மிகச்சிறந்த நாளிதழ், அதை யாராலும் மறுக்க முடியாது. எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து, அதாவது 1999-ஆம் ஆண்டில் இருந்தே நான் தினமலர் படித்து வருகிறேன். இன்றைய லேட்டஸ்ட் டிரெண்டிங்கிற்கு ஏற்ப பல மொபைல் செயலிகள் (Apps) வந்திருந்தாலும், தினமலர் செயலிச் செய்திகள் பிரிவில் உண்மையிலேயே மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. Ipaper Application எனக்கு இரு முக்கிய ஆலோசனைகள் உள்ளன: 1. வாராந்திர சந்தா (Weekly Subscription) அறிமுகப்படுத்தலாம். 2. தினசரி அன்றாடத் தேவைக்கேற்ப வாங்கும் வசதியை (Daily On-the-Go Purchase) வழங்கலாம்.


Saai sundaramurthy. A.V.K
ஜூலை 30, 2026 11:26

தினமலரின் சிறந்த சேவைக்கு நல்வாழ்த்துக்கள்.


VSMani
ஜூலை 30, 2026 11:18

16 வயதில் காணாமல் போனவனுக்கு 23 வருடங்கள் தனது பெற்றோர் உடன் பிறந்தோர் நினைப்பே வரவில்லையா? 16 வயது என்றால் சொந்த ஊர் எது என்று நன்றாக தெரியும் பெற்றோர் யார் என்று நன்றாக தெரியும். இவன் உடனே பெற்ற தாய் தகப்பனை பார்க்க இவனாகவே வரவேண்டாமா? இந்த வயதான தாயார் தான் இவனை கண்டு பிடிக்க வேண்டுமா? இதுதான் பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு" என்ற பழமொழியின் அர்த்தம்.


வாய்மையே வெல்லும்
ஜூலை 30, 2026 16:29

செய்தியை படிப்பதே இல்லை.. அதுக்குள்ள கல்லு மண்ணு ஜல்லின்னு பேச்சு. அவன் சுதந்திரமாக இல்லை . அவனை யாரோ கடத்தி கோத்தடிமை வேலை செய்யவைத்துள்ளார். எப்படி பாசம் பீறிட்டு வருமா ? வந்தாலும் அடிமைக்கு வேலைவாங்குபவன் விட்டுவிடுவானா ?


Ram
ஜூலை 30, 2026 10:55

ஆவணங்கள் எதற்கு, ஒரு dna டெஸ்ட் செய்தலே போதுமே


Ram pollachi
ஜூலை 30, 2026 10:48

தற்போது பெற்றோர்கள் சம்மதத்துடன் பஞ்சாபில் உள்ள கல்லூரியில் நிறைய நம் மாநில மாணவர்கள் படிக்கிறார்கள் காரணம் தெரியவில்லை சப்பாத்தி, ரூமாலியா சுக்க ரொட்டி, பட்டர் நான், பன்னீர் மட்டர் மசாலா.... லங்கர் இதற்கு பஞ்சம் இல்லை.... கல்யாணம் ஆன மாதிரி தெரியுது. நம் ஊர் சிங் என்னமா தமிழ் பேசுது....


Balasubramanian
ஜூலை 30, 2026 10:44

தாயை காத்த தனையன் என்று கேள்விப் பட்டதுணடு! இது தலை கீழாக உள்ளது! தாயின் நல்ல உள்ளம் வாழ இனி தனையன் உழைத்து உயர வேண்டும்! வாழ்த்துக்கள்


Svs Yaadum oore
ஜூலை 30, 2026 08:29

இப்படிப்பட்ட தாய்மார்கள் உள்ள கலாச்சாரம் இந்த நாடு ....23 ஆண்டுகள் போராடிய தாய் ..ஆனால் இன்று நிலைமை என்ன ... இன்று தினம் தினம் எப்படிப்பட்ட கலாச்சார சீரழிவு காம போதை செய்திகள்.....திராவிடத்தால் வீழ்ந்த தமிழ் நாடு ....


Siva S
ஜூலை 30, 2026 10:20

தமிழ்நாட்டை கடுவுளாலும் காப்பாற்றமுடியுமா என்று சந்தேகமாக உள்ளது ஏனெனில் அதர்மம் அந்தளவு தலை விரித்து ஆடுகிறது


V RAMASWAMY
ஜூலை 30, 2026 08:22

Congratulations Dinamalar and team for this wonderful humanatarian social service, it is indeed nobele, God Bless. May Mother and son live happily ever.


இசக்கிமுத்து,தூத்துக்குடி
ஜூலை 30, 2026 08:01

ஆறு வயதில் தொலைந்து போயிருந்தாலும் அறியாத வயது என்று கூறலாம். ஆனால் இவர் 16 வயதில் காணாமல் போயிருக்கிறார் அப்படி என்றால் நன்றாக விபரமறிந்த பேசத்தெரிந்த இளைஞராகத்தான் இருந்திருப்பார் ஒரு கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவராக இருக்கலாம். எங்கே தவறு நடந்தது என்று தெரியவில்லை! எப்படியோ தாயும் பிள்ளையும் சேர்ந்து விட்டார்கள் அதுவே நிம்மதி.


N.Purushothaman
ஜூலை 30, 2026 08:49

பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருந்திருப்பார் ...அதனால் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் வருத்தம் அவரை வேறொரு முடிவை நோக்கி தள்ளி இருக்கலாம் ...


Malar
ஜூலை 30, 2026 12:21

விஷயம் அவ்வளவு சுலபமானது அல்ல சாமி. ஹிந்தி, ஆங்கிலம் தெரியாதவன் ஆந்திராவை தாண்டி சென்றுவிட்டால் முறையாக திரும்பிவர எந்த உத்திரவாதமும் இல்லை. அறிவு கூர்மை உடையவர்கள் இந்தியை விரைவாக கற்று கொள்வார்கள், திரும்பி விடுவார்கள். மற்றவர்கள் நிலை அவரவர்கள் விதிப்படி