உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / மழை பெய்யாததில் வருத்தமோ?

மழை பெய்யாததில் வருத்தமோ?

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கக்கடவு, பழனிக்கவுண்டன்புதுார் பகுதிகளில் சாலை அமைக்க நடந்த பூமி பூஜையில், பொள்ளாச்சி தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயராமன் பங்கேற்றார்.அப்போது கூறுகையில், 'சென்னையில் சுமாரான மழைக்கே மக்கள் திண்டாடினர். 'ரெட் அலெர்ட்' போல கனமழை பெய்திருந்தால், சென்னை மக்கள் சீரழிந்து போயிருப்பர். மழை, வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, மழைநீர் வடிகால் அமைப்பு பணியை மேற்கொண்டது குறித்து, நாம் வெள்ளை அறிக்கை கேட்டால், அதை கொடுப்பதை விட்டு, துணை முதல்வர் உதயநிதி கேலி, கிண்டல் பேசுகிறார்' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'மழைக்கு மக்கள் தத்தளித்திருந்தால், அதை வைத்து அரசியல் செய்திருப்பாங்க... ஆக, சென்னையில் மழை பெய்யாததில் இவங்களுக்கு ரொம்ப வருத்தம் இருக்கும் போலிருக்கே...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள், ஆமோதிக்கும் வகையில் கமுக்கமாக சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
அக் 28, 2024 19:00

படகுகள் வாங்கி, வடி பம்புகள் வைத்து என்று சமாளித்தாயிற்று. இனி அடுத்த மழைக்குப் பார்த்துக்கொள்ளலாம். அப்போதென் இந்த படகுக் 'கொள்முதலில்' அடிக்கலாம் மழை இவர்களுக்கு பணமழையாகப் பாய்கிறது


D.Ambujavalli
அக் 28, 2024 19:00

படகுகள் வாங்கி, வடி பம்புகள் வைத்து என்று சமாளித்தாயிற்று. இனி அடுத்த மழைக்குப் பார்த்துக்கொள்ளலாம். அப்போதென் இந்த படகுக் 'கொள்முதலில்' அடிக்கலாம் மழை இவர்களுக்கு பணமழையாகப் பாய்கிறது


Dharmavaan
அக் 28, 2024 07:34

வடிகால் ஒழுங்காக இருந்தால் நீரை பம்ப் மூலம் வெளியேற்ற தேவையில்லை. 4000 கோடி பணத்தை ஏப்பம் விட்டுவிட்டு நீர் வெளியேற்றம் கண்துடைப்பு வேலை


புதிய வீடியோ