உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  பிள்ளைகள் தலையில் விடியும்!

 பிள்ளைகள் தலையில் விடியும்!

தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு, திருநெல்வேலியில் சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற போது அரசின் கடன், 5.78 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது; தற்போது, 10.62 லட்சம் கோடியாக கடன் உயர்ந்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். வாங்கப்பட்ட கடன் முழுதும் கல்வி, மருத்துவம், மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் உதவித்தொகை, காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. 'தமிழக அரசு கடன் வாங்கி விட்டதாக குறை கூறுவோர், அந்த கடன், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தப்பட்டதை புரிந்து கொள்ள வேண்டும். தமிழக அரசு ஏழைகளுக்காக கடன் வாங்குகிறது; ஆனால், பிரதமர் மோடி அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக கடன் வாங்குகிறது' என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், 'என்ன தான் ஏழைகளுக்காக கடன் வாங்கினாலும், நாளைக்கு அந்த ஏழைகளின் பிள்ளைகள் தலையில் தானே அது விடியும்...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

P.Sekaran
பிப் 24, 2026 17:30

மக்கள் புரிந்துகொண்டு இந்த தடவை நேர்மையான ஆட்சிக்கு வாக்களிக்கவேண்டும். இது தமிழ்நாட்டு மக்களின் கடமையாகும். கடைசி சமயத்தில் பணத்துக்கு அடிமையாககூடாது. பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள். அது உங்களிடம் கொள்ளையடித்த பணம்தான். ஓட்டை மட்டும் நேர்மையின்பக்கம் உள்ளவர்களுக்கு போடவேண்டும் பசப்பு வார்த்தைக்கும் வெற்று விளம்பரத்திற்கும் அடிபணிந்து விடாதீர்கள். மக்களுக்கு ஐந்து வருடம் ஒரு முறை வரும் நல்ல வாய்பு தவறவிட கூடாது.


Anantharaman Srinivasan
பிப் 24, 2026 12:15

எல்லா தினசரி பத்திரிகைகளிலும் அடிக்கடி வரும் முழுபக்க விளம்பர செலவு ஏழை மக்களுக்காகவா? அந்த விளம்பர செலவுகள் யார் தலையில் விடியும்..?


D.Ambujavalli
பிப் 24, 2026 06:32

இவர்கள் கடன் வாங்கி, அதில் ஒரு பகுதியை இப்படி செலவிட்டு, மீதியை அமுக்குவார்கள் இந்த மாநிலத்தில் வசிக்கும் பாவத்துக்காக மக்கள் ஏழு தலைமுறைக்கு கடன் அடைக்கவேண்டும் விளம்பரம் இவர்களுக்கு, கடன் சுமை மக்களுக்கு, நல்ல நியாயம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை