உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / முதல்ல நாம மாறணும்!

முதல்ல நாம மாறணும்!

திருச்சி மாநகராட்சியைக் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் உதயகுமார், மாநகர் மாவட்ட செயலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், உதயகுமார் பேசுகையில், 'தி.மு.க., அரசு மக்களுக்கு பொங்கல் பரிசு தரவில்லை. அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் பொங்கலுக்கு 2,500 ரூபாய் தருவோம்' என்றார்.இதைக் கேட்ட பார்வையாளர் ஒருவர், 'அப்ப, எதிர்க்கட்சித் தலைவரா இருந்த ஸ்டாலின், பொங்கல் பரிசா 5,000 ரூபாய் தரணும்னு முழங்கினார்... இப்பதானே அவரோட சுயரூபம் தெரியுது... அந்த மாதிரி, நாளைக்கு இவங்க ஆட்சிக்கு வந்தால்தான் இவங்க சுயரூபமும் தெரியும்...' என, முணுமுணுத்தார்.உடனே மற்றொருவர், 'இந்த ரெண்டு கட்சிகளும் மாறி மாறி சுயரூபத்தைக் காட்டினாலும், நாம திருந்தாம இவங்களுக்கு தானே ஓட்டு போடுறோம்... முதல்ல நாம மாறணும்...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஜன 10, 2025 06:11

ஆயிரம்தான் குற்றம் குறை இருந்தாலும், தேர்தலில் 200, 500, குவார்ட்டர், கொலுசு பேசிவிடும் அந்தத் தைரியம்தானே இவர்களை பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஜெயிக்க vaikkirathu


Yes your honor
ஜன 10, 2025 10:41

திராவிட வாக்குறுதிகள் என்பவை மேடையில் டைம்பாஸ் செய்வதற்கான கண்டென்ட்டுகள், அவ்வளவுதான். இது மக்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும். இலவசங்களுக்கு பல் இளிக்கும் பிச்சைக்காரத்தனம் போகாதவரை ஒன்றும் உறுப்படப்போவதில்லை.


சமீபத்திய செய்தி