உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  ஓட்டு வங்கி அதிகரிச்சிருக்கே!

 ஓட்டு வங்கி அதிகரிச்சிருக்கே!

பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம், சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ' பா.ஜ., தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தனது, 'வீ த லீடர்ஸ்' அமைப்பை வளர்க்க கூட்டம், மாநாடு நடத்தலாம். ஆனால், அவர் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்க வேண்டும்; ஏறிய ஏணியை எட்டி உதைக்காமல் இருக்க வேண்டும். ஏறிய ஏணி என்பது பா.ஜ., கட்சி. அதன் சித்தாந்தம், கொள்கைகளால் தான் தமிழகத்தில் அண்ணாமலை அடையாளம் காணப்பட்டார். 'ஆனால், மத்திய அரசு திட்டங்களை பற்றியும், தேசிய கட்சிகளின் பார்வைகளை கொச்சைப்படுத்தியும் அண்ணாமலை பேசுவது கண்டனத்துக்குரியது. அவர், தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்; இல்லை என்றால், மக்களால் திருத்தப்படுவார்' என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், 'அண்ணாமலையால் தமிழகத்தில் பா.ஜ., ஓட்டு வங்கி அதிகரிச்சதை பத்தி பேச மாட்டேங்கிறாரே' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
ஜூலை 14, 2026 18:53

உள்கட்சியின் சிறு. சிறு. பிரசினைகள். காரணமாக. அண்ணாமலையை. அதுவும் எடப்பாடியுடன் . கூட்டணியில். இருந்ததால் அவர். கூற்றுக்கு. தலையாட்டி, இவரை ஓரங்கட்டியபின்தான். தமிழகத்தில். பாஜவின். ஓட்டுவங்கி. 2, 1 1 / 2. இறங்கியது இதனை. பா ஜ உணராததால் நஷ்டம். அவர்களுக்குத்தான்.


M.S.Jayagopal
ஜூலை 14, 2026 08:45

அண்ணாமலையை பாஜக கோட்டை விட்டு விட்டது.அவரைப்போன்ற திறமையான தலைவரால்தான் தமிழ் நாட்டில் பாஜகவை வளர்க்க முடியும். அண்ணாமலையை பாஜகவிற்குள் மீண்டும் கொண்டுவர வறட்டு கெளரவம் பார்க்காமல் பாஜக ஆவன செய்யவேண்டும்.


Lakshminarasimhan
ஜூலை 14, 2026 07:48

ஏன்னா அண்ணாமலை ஒன்றும் செய்யவில்லை