உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / அவங்க பிரச்னையே தீரலையே!

அவங்க பிரச்னையே தீரலையே!

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி பேரூராட்சி யில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. சேலம் தாசில்தார் பார்த்தசாரதி, தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று, முகாமை துவக்கி வைத்தனர். இதில், ஏராளமானோர் மனுக்கள் அளித்தனர். அப்போது, ஆளுங்கட்சியைச் சேர்ந்த பலரும், இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்டவை கேட்டு மனுக்கள் அளித்தனர். இதை பார்த்த பொதுமக்களில் ஒருவர், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்து, நாலரை வருஷமாகியும், அவங்க கட்சிக்காரங்க பிரச்னையே தீராமல் இருக்கும் போல. இன்னும் மனு கொடுத்துட்டு இருக்காங்களே...' என, முணுமுணுத்தார். அவரது அருகில் இருந்தவர், 'அதானே... இதுல, நாம கொடுக்கிற மனுக்களுக்கு என்ன தீர்வு கிடைக்கும்னு தெரியலையே...' என, புலம்பியபடியே, வரிசையில் முன்னோக்கி நகர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
செப் 08, 2025 18:55

'சேலத்துக்கு அருகில் எந்த ஆறு ஓடுகிறது, எந்த ஏரி இருக்கிறது அவர்களின் அங்கங்கு கட்டுக்கட்டாக 'disposal' செய்யப்படும். அல்லது அடுத்த 2/3 மாதங்களுக்கு வண்டிக்கடைப் பலகாரங்கள் கட்டித்தரப்படும் வேலை கெட்டுப்போய் இங்கு மனுக்கொடுத்தவர்களின் தலையெழுத்து இதுதான் கேட்டால், 'நடவடிக்கை முடிந்து வீசிவிட்டோம்' என்பார்கள்


Raghavan
செப் 08, 2025 13:32

எப்படியும் இந்த மனுக்களை எடைக்கு போட்டால் குறைந்தது ஒரு 70 முதல் 100 கிலோ தேறும். ஒரு கிலோ 8 ரூபாவீதம் தேறும். ஜனங்களும் இதை இன்னமும் நம்பி அந்த கூட்டத்துக்கு போய் கால்கடுக்க நின்று நேரத்தை வீணடிக்கிறார்கள். ithallam ஒரு துடைப்பு நாடகம் என்பதை எப்போதுதான் இவர்கள் புரிந்து கொள்வார்கள். இ சேவை மூலமாக வரும் மனுக்களையே இவர்கள் பரிசீலித்து ஒன்றும் செய்வதில்லை. காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவை சாத்தடி என்பதில் குறியாக இருப்பார்கள் இந்த அதிகாரிகள். சொந்தகாரர்களிடமே காசு வாங்கிக்கொண்டுதான் வேலையை முடித்துத்தருவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை