உள்ளூர் செய்திகள்

புகார் பெட்டி ..

விபத்து அபாயம்

கச்சிராயபாளையம் - கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலையில் தோப்பூர் அருகே விபத்து மற்றும் சாலை வளைவு பகுதியில் ஒளிரும் முன்னெச்சரிக்கை விளக்குகள் மாதக்கணக்கில் எரியாமல் உள்ளன. -ஞானசேகர், தோப்பூர்.

வழிகாட்டி தகவல் பலகை

கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில், காரனுார் பஸ் நிறுத்தத்தில் அரசு கல்லுாரிக்கு செல்ல வழிகாட்டி தகவல் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமகிருஷ்ணன், காரனுார்.

குப்பைகள் எரிப்பு

சின்னசேலம் ஏரிக்கரையில், குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிக்கப்படுவதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். -மணிமாறன், சின்னசேலம்.

துர்நாற்றம்

கோட்டைமேடு, பெரிய ஏரியில் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டுவதால் பயங்கர துர்நாற்றம் வீசகிறது. -பிரசாந்த், கள்ளக்குறிச்சி.

மழைநீர் தேக்கம்

வீரசோழபுரம் டோல்கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குளம் போல் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.-வினோத்குமார், கள்ளக்குறிச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை