/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் : புகார் பெட்டி ; பேருந்து நிலையத்தில் ஏ.டி.எம்., மையம் வேண்டும்
காஞ்சிபுரம் : புகார் பெட்டி ; பேருந்து நிலையத்தில் ஏ.டி.எம்., மையம் வேண்டும்
பேருந்து நிலையத்தில் ஏ.டி.எம்., மையம் வேண்டும்
உத்திரமேரூர் பேருந்து நிலையத்திற்கு தினமும், 1,000க்கும் மேற்பட்ட பயணியர் வருகின்றனர். இந்நிலையில், உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் ஏ.டி.எம்., வசதி இல்லாமல் உள்ளது. இதனால், பேருந்து நிலையத்திற்கு வரும் பயணியருக்கு பணம் தேவைப்படும்போது, 100 மீட்டர் தூரமுள்ள ஏ.டி.எம்., மையத்திற்கு சென்று பணம் எடுத்து வருகின்றனர். இதனால் பேருந்துகளை தவறவிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில், பயணியரின் வசதிக்காக ஏ.டி. எம்., மையம் திறக்க வேண்டும்.- -ஆர்.எஸ். அறிவழகன், திருப்புலிவனம்.