புகார் பெட்டி: மழைநீர் கால்வாய் துார்வாரப்படுமா?
மழைநீர் கால்வாய்துார்வாரப்படுமா?திருவாலங்காடு ஒன்றியம், பெரியகளக்காட்டூர் ஊராட்சியில் உள்ள பெரியகளக்காட்டூர், சின்னகளக்காட்டூர் ஆகிய கிராமத்தில் 37க்கும் மேற்பட்ட மழைநீர் கால்வாய் பல மாதங்களாக துார்வாரப் படவில்லை.கால்வாயில் பிளாஸ்டிக் பாட்டில், குப்பை, மண் சேர்ந்து மூடப்பட்ட நிலையில் உள்ளது. மேலும், கொசு தொல்லையால் நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மழைநீர் கால்வாயை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கோ. பிரவீன்குமார், பெரியகளக்காட்டூர்.