/ புகார் பெட்டி / திருவள்ளூர் / திருவள்ளூர் : புகார் பெட்டி; பாழாகும் சிமென்ட் கல் சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா?
திருவள்ளூர் : புகார் பெட்டி; பாழாகும் சிமென்ட் கல் சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா?
பாழாகும் சிமென்ட் கல் சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா?
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் சுற்றுச்சுவரை சுற்றிலும், கடந்தாண்டு 30 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் கல் சாலை அமைக்கப்பட்டது. பக்தர்கள் கோவிலை சுற்றி வர இச்சாலையை பயன்படுத்தி வந்தனர்.சமீப நாட்களாக இச்சாலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஜல்லிக் கற்கள் மற்றும் மண்ணை கொட்டியுள்ளனர். இதனால், சிமென்ட் கல் சாலை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- வி.முரளிதரன், திருவாலங்காடு.