உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / வல்லக்கோட்டை முருகன் கோவிலில் கிருத்திகை விழா

வல்லக்கோட்டை முருகன் கோவிலில் கிருத்திகை விழா

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஏழு அடி உயரத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.இக்கோவிலில், சித்திரை மாதம் கிருத்திகையையொட்டி, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, மூலவர் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரணிய சுவாமி, உற்சவர் கோடையாண்டவர் முருபெருமானுக்கு பால் அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, மூலவர் முருகப்பெருமான் எலுமிச்சை மாலை அலங்காரத்திலும், சஷ்டி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான் வீராசன மலர் அலங்காரத்திலும் அருள்பாலித்தனர்.ஏராளமான பக்தர்கள் முருகபெருமானை வழிப்பட்டனர். ஏற்படுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ