மேலும் செய்திகள்
சில வரி : வியாபாரியிடம் கைவரிசை இளம்பெண் கைது
22-Aug-2025
சென்னை:காரப்பாக்கத்தில், பணியிலிருந்த வடமாநில நபரிடம் மொபைல் போன் பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை, காரப்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் வழித்தட பணித்தளத்தில், நேற்று அதிகாலை பீஹாரைச் சேர்ந்த ஹர்சிங், 18, என்பவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த மூவர், கட்டையால் அவரை தாக்கி, அவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர். காயமடைந்த ஹர்சிங்கை அங்கிருந்தோர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, ஹர்சிங்கிற்கு, தலையில் 6 தையல்கள் போடப்பட்டன. இதுகுறித்து, கண்ணகி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
22-Aug-2025