தகவல் சுரங்கம்
ஆயுத தொழிற்சாலை தினம்மத்திய அரசின் கீழ் செயல்படும் ஆயுத தொழிற்சாலை வாரியம் 1787ல் மேற்கு வங்கத்தில் தொடங்கப்பட்டது. 1802 மார்ச் 18ல் உற்பத்தியை தொடங்கியது. இந்நாளே (மார்ச் 18ல்) தேசிய ஆயுத தொழிற்சாலை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இது 'பாதுகாப்பு துறையின் நான்காவது கை' என அழைக்கப்படுகிறது. இதன்கீழ் 41 ஆயுதத் தொழிற்சாலைகள், 9 பயிற்சி நிறுவனங்கள், மூன்று மண்டல மார்க்கெட்டிங் மையங்கள் செயல்படுகின்றன. தரை, ஆகாயம், கடல் பகுதி பாதுகாப்புக்கு தேவையான ஆராய்ச்சி, மேம்பாடு, தயாரிப்பு, பரிசோதனை பிரிவுகளில் செயல்படுகிறது.