தகவல் சுரங்கம்
உலக ஓவிய தினம்
ஓவியம் என்பது அழகியல் சார்ந்த கலை. இது நம் சிந்தனை திறனை வளர்க்கிறது. இதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, உலக புகழ்பெற்ற ஓவியரான இத்தாலியின் லியோனார்டோ டா வின்சியின் பிறந்த தினமான ஏப். 15, யுனெஸ்கோ சார்பில் உலக ஓவிய தினமாக கொண்டாடப்படுகிறது. ஓவியர்களின் திறமையை அங்கீகரிப்பது, படைப்பாற்றல் திறனை வெளிக்கொண்டு வருவதே இதன் நோக்கம். இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் பார்க்கப்படுகிறது. குழந்தைப்பருவத்தில் இருந்து ஓவியத்திறனை வளர்க்க வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.