தகவல் சுரங்கம் : குடிமை பணிகள் தினம்
தகவல் சுரங்கம்குடிமை பணிகள் தினம்இந்தியாவின் வளர்ச்சியில் ஐ.ஏ.எஸ்., / ஐ.பி.எஸ்., / ஐ.ஆர்.எஸ்.,/ ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் (குடிமை பணி) அதிகாரிகளின் பங்கு முக்கியமானது. 1947 ஏப்., 21ல் டில்லி 'மெட்கால்பே' இல்லத்தில், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேல், சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் முதல் குழுவிடம் (பேட்ஜ்) உரையாற்றினார். இதை நினைவுபடுத்தும் விதமாக 2006ல் ஏப். 21ல் தேசிய குடிமை பணிகள் தினம் தொடங்கப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றும் சிவில் சர்வீஸ் அதிகாரிகளை கவுரவிக்கும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது.