உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / தகவல் சுரங்கம் / தகவல் சுரங்கம்:தேசிய நாளிதழ் தினம்

தகவல் சுரங்கம்:தேசிய நாளிதழ் தினம்

தகவல் சுரங்கம்தேசிய நாளிதழ் தினம்ஜனநாயகத்தின் நான்காவது துாண் நாளிதழ். உண்மை தகவல்களை உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மாணவர்கள் அறிவு, வாசிப்பு திறனை அதிகரிக்க நாளிதழ் படிப்பது அவசியம்.1780 ஜன.29ல் 'ஹிக்கிஸ் பெங்கால் கெசட்' வார இதழ் கோல்கட்டாவில் வெளியானது. இது இந்தியா, ஆசியாவின் முதல் அச்சிடப்பட்ட செய்தித்தாள். ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி இதை தொடங்கினார். இதை நினைவுப்படுத்துதல், நாளிதழின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்தியாவில் ஜன. 29ல் தேசிய நாளிதழ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை