அரசு கல்லுாரிகளில் 574 விரிவுரையாளர் வாய்ப்பு
தமிழக அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் தற்காலிக பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கவுரவ விரிவுரையாளர் பணியில் வணிகவியல் 80, கம்ப்யூட்டர் சயின்ஸ் 65, ஆங்கிலம் 58, தமிழ் 55, வரலாறு 33, பொருளாதாரம் 33, வேதியியல் 32, கணிதம் 30, தாவரவியல் 29, விலங்கியல் 27, இயற்பியல் 26 உட்பட மொத்தம் 574 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு. நெட், ஸ்லெட், செட் - ஏதேனும் ஒரு தகுதி பெற்றிருக்க வேண்டும். வயது: 57 வயதுக்குள் (1.7.2025ன் படி) தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100 கடைசிநாள்: 4.8.2025 விவரங்களுக்கு: tngasa.org