ஏனாத்துாரில் நாளை மாடு வளர்ப்பு பயிற்சி
காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில், நாளை கறவை மாடு வளர்ப்பு குறித்து, ஒரு நாள் கட்டண பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இந்த பயிற்சி முகாமில், 100 ரூபாய் செலுத்தி படித்த இளைஞர்கள் மற்றும் பலதரப்பு விவசாயிகள், ஆதார் எண் நகலுடன் பங்கேற்கலாம். குறிப்பாக, வேலைவாய்ப்பு தேடும் பட்டதாரிகள், படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.தொடர்புக்கு: க.பிரேமவல்லி,பேராசிரியர் மற்றும் தலைவர்,உழவர் பயிற்சி நிலையம், ஏனாத்துார். தொலைபேசி எண்- 044 - -2726 4019 /88700 20916